ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தயாரிப்பாளர் அசோக்குமாரின் தற்கொலைக்கு பிறகு தமிழ் சினிமாவில் கந்து வட்டி பற்றிய அவலக்குரல்கள் ஒலிக்க தொடங்கி உள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக கோவை வந்த பிரகாஷ் ராஜ், விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதன் விபரம் வருமாறு...
எல்லோரும் கடன் வாங்கி தான் படம் எடுக்கிறோம். இருந்தாலும் அவரை சாகும் அளவுக்கு தூண்டியதை ஏற்க முடியாது. இது எல்லோருக்கும் தெரிந்து நடந்த தற்கொலை. தெரியாமல் ஏராளமானோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். எவ்வளவு பேர் வீட்டை இழந்துள்ளார்கள் என்று தெரியவில்லை. சினிமாவில் ஒரு சிலர் சம்பாதிப்பதை பார்த்து பலரும் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
இங்கு பெரிய சம்பளம் வாங்குபவர்கள் 10 சதவீதம் பேர் மட்டுமே உள்ளனர். கருப்பு பணம் வாங்குவதை நிறுத்த வேண்டும். தமிழக திரையுலகில் கந்து வட்டியால் சிறு தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளைப் போல் நெருக்கடியான சூழ்நிலைக்குத் தயாரிப்பாளர்களும் தள்ளப்பட்டுள்ளனர். தமிழ்த் திரையுலகில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். இனியும் தமிழகத்தில் கந்து வட்டி மரணம் தொடரக் கூடாது. இந்த விவகாரத்தில் அரசு உதவ வேண்டும்.
ரஜினி, கமல் அரசியலுக்கு வருவதில் எந்த தவறும் கிடையாது. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.