மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
சிவகார்த்திகேயனும், இயக்குனர் பொன்ராமும் இணைந்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' ஆகிய படங்கள் கமர்ஷியலாக வெற்றியடைந்தன. தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனும், இயக்குனர் பொன்ராமும் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் தென்காசியில் தொடங்கியது.
சம்பளம் பிரச்னை, சமந்தா திருமணம், வேலைக்காரன் படப்பிடிப்பு என இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது எல்லாம் முடிந்து மீண்டும் படப்பிடிப்பு துவங்கி உள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளான பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
சிவகார்த்திகேயனுடன் முதன் முதலாக சமந்தா ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' படங்களைப் போல இந்தப்படமும் கிராமத்துப் பின்னணியில் உருவாகிறது. இந்த படத்திற்காக சமந்தா சிலம்பாட்ட பயிற்சி எடுத்து நடித்து வருகிறார்.