ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்துக்களின் புனித ஸ்தலங்களில் ஒன்றான சபரிமலையில் தினமும் நடை சாத்தும்போது ஸ்வாமி அய்யப்பனை தூங்க வைப்பதற்காக ஜேதாஸ் பாடிய ஹரிவாரசனம்... பாடல் ஒலிக்கும். பல ஆண்டுகளாக இருக்கும் நடைமுறை இது. இந்தப் பாடலை ஜேசுதாஸ் சபரிமலைக்காக பாடவில்லை. 1975ம் ஆண்டு வெளிவந்த சுவாமி அய்யப்பன் என்ற தமிழ் படத்திற்காக பாடிய பாடல். எம்.என்.நம்பியார், ஜெமினி கணேசன், பாலாஜி உள்பட பலர் நடித்திருந்தார்கள். தமிழ், மலையாளம் இரண்டு மொழிகளிலும் படம் வெற்றி பெற்றது. ஜேசுதாஸ் பாடிய ஹரிவாசனம் பாடல் கேரள மக்களை கவர்ந்தது. பாடலுக்கு ஜி.தேவராஜன் இசை அமைத்திருந்தார்.
இதனால் சபரிமலை தேவசம் போர்ட் இந்த பாடலையே சபரிமலை பாடலாக மாற்ற முடிவு செய்து அந்த பாடலை ஜேசுதாஸை மீண்டும் பாட வைத்து, தேவராஜனை இசை அமைக்கவைத்து சபரிமலை பாடலாக்கினார்கள். இப்போது இந்த பாடலில் சில மாற்றங்களை செய்து மீண்டும் ஒலிப்பதிவு செய்ய இருக்கிறார்கள். இதுகுறித்து தேசம்போர்ட் தலைவர் பத்மகுமார் கூறியிருப்பதாவது:
பொதுவாக ஹரிவராசனம் பாடலில் "ஹரிவராசனம் ஸ்வாமி விஸ்வமோகனம்" என்ற இருக்க வேண்டும். ஆனால் சபரிமலையில் ஒலிக்கும் பாடலில் ஸ்வாமி என்பது இல்லை. மேலும் அரிவிமர்த்தனம் என்பதை ஒரே வார்த்தையாக பாடியிருப்பார். அரி என்றால் எதிரி, மர்த்தனம் என்றால் அழித்தல் எனவே இவை தனித்தனி வார்த்தைகள் தனித் தனியாக உச்சரிக்க வேண்டும். இப்படி சில மாற்றங்களுடன் பாடலை மீண்டும் ஒலிப்பதிவு செய்ய இருக்கிறோம். இதற்கு ஜேசுதாஸூம் ஒப்புக் கொண்டுவிட்டார். வருகிற 30ந் தேதி ஒலிப்பதிவு செய்யப்படுகிறது. என்கிறார் பத்மகுமார்.