அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
உதயா கிரியேஷன் என்ற பட நிறுவனம் சார்பில் மனோ உதயகுமார் தயாரிக்கும் படம் மேல் நாட்டு மருமகன் . ராஜ்கமல் நாயகனாக நடிக்கிறார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரீயன் நாயகியாக அறிமுகமாகிறார். மற்றும் வி.எஸ்.ராகவன், அஞ்சலிதேவி, அசோகராஜ், சாத்தையா மற்றும் பலர் நடித்துள்ளனர். கே.கவுதம் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். வே.கிஷோர் குமார் இசை அமைத்துள்ளார். எம்.எஸ்.எஸ் என்ற புதுமுகம் இயக்கியுள்ளார்.
"மகாபலிபுரத்துக்கு சுற்றுலா வரும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரீயனுக்கும், மகாபலிபுரம் கைடு ராஜ்கமலுக்கு இடையே வரும் காதலும், அந்த காதலால் வரும் பிரச்சினைகளும்தான் கதை. தமிழ் கலாச்சாரத்தையும், பிரஞ்சு கலாச்சாரத்தையும் அழகாக பதிவு செய்திருக்கிறோம். காதலுக்கு தேச எல்லைகள் கிடையாது என்பதையும் காட்டியிருக்கிறோம். ஹீரோயின் ஆண்ட்ரீயன் தனது நாட்டிலும் படத்தை வெளியிட வேண்டும் என்று விரும்பினார். அவரது விருப்பத்தையொட்டி பிரான்சில் 30 தியேட்டர்களில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். டிசம்பர் மாத இறுதியில் படம் வெளிவருகிறது. தமிழ்நாடு, பிரான்ஸ் இரண்டு நாட்டிலும் ஒரே நாளில் வெளிவரும்" என்கிறார் இயக்குனர் எம்.எஸ்.எஸ்.