ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தமிழ் சினிமாவில் கதாநாயகர்களுக்கு ஒரு தனி அந்தஸ்தைப் பெற்றுத் தருவது போலீஸ் கதைகள் தான். அந்த கதாபாத்திரங்களில் நடித்த பிறகு தான் அவர்களுக்கு ஆக்ஷ்ன் ஹீரோ என்ற இமேஜ் அதிகமாகப் பொருந்துகிறது.
ரஜினிகாந்துக்கு 'மூன்று முகம்', கமல்ஹாசனுக்கு 'காக்கிச் சட்டை' என அப்போதைய நடிகர்களுக்கும், இப்போதைய நடிகர்களில் விஜய்க்கு 'போக்கிரி', அஜித்துக்கு 'மங்காத்தா', விக்ரமுக்கு 'சாமி', சூர்யாவுக்கு 'சிங்கம்' எனவும் சொல்லலாம். கார்த்திக்கு 'சிறுத்தை' பட ரத்தினவேல் பாண்டியன் என்ற போலீஸ் கதாபாத்திரம் அவருக்குப் பெரிய பெயரை வாங்கிக் கொடுத்தது.
அந்தப் படத்திற்குப் பிறகு கார்த்தி டிஎஸ்பி அதிகாரியாக நடித்து இன்று வெளிவந்துள்ள 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் அவருடைய நடிப்பை நேற்று நடந்த பிரிமீயர் காட்சியில் பல திரைப் பிரபலங்கள் பாராட்டியுள்ளார்கள். போலீஸ் கதாபாத்திரத்தில் சூர்யாவை விட அவரது தம்பி கார்த்தி பொருத்தமாக இருப்பதாகப் பலரும் கூறியுள்ளார்கள். அவ்வளவு ஏன், அண்ணன் சூர்யாவே, தம்பி கார்த்தியின் நடிப்பை மனதாரப் பாராட்டியிருக்கிறார்.
'சிங்கம்' படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் சிங்கம் 2, சி 3 என வந்தது போல 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் அடுத்தடுத்த பாகங்களும் வரும் எனத் தெரிகிறது.