ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய்யின் கேரியரில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்த துப்பாக்கி, கத்தி படங்கள் முக்கியமானவை. சமூக நோக்கத்துடன் எடுக்கப்பட்ட அந்த படங்களைப்போலவே மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவரது 62வது படமும் உருவாகிறது. இந்த படத்தில் கத்தி படத்தைப் போலவே விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். அதில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக நடிப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.
மெர்சல் படத்தில் இலவச மருத்துவம் குறித்து பேசிய விஜய், இந்த புதிய படத்தில் விவசாயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை பேச உள்ளாராம். சமீபகாலமாக தமிழகத்தில் விவசாயிகள் மத்தியில் வெடித்துள்ள ஹைட்ரோ கார்பன் போராட்டம் உள்ளிட்ட சில விவசாய பிரச்சினைகளுக்கு இந்த படத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதாம். அதனால் விஜய், விவசாயியாக நடிக்கயிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அந்த வகையில், சமூக அக்கறையுள்ள ஒரு இளைஞனின் கோபத்தின் வெளிப்பாடுதான் இந்த படத்தின் கதையாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.