ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
புதுடில்லி : பாலிவுட்டின் பிரபல இயக்குனர், சஞ்சய் லீலா பன்சாலி, ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த, ராணி பத்மினியின் கதையை மையமாக வைத்து பத்மாவதி என்ற படத்தை படமாக்கி உள்ளார். இந்த படம், அடுத்த மாதம் வெளியாகிறது. இப்படத்தில், ராஜபுத்திர சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையிலான காட்சிகள் இருப்பதாகக் கூறி, அந்த சமூகத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக தீபிகா படுகோனே, இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருகின்றன. இந்நிலையில் பத்மாவதி படத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வக்கில் சர்மா என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில் சர்ச்சைக்குள்ளான பத்மாவதி படத்தை மீண்டும் மறு தணிக்கை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கு இரண்டொரு நாளில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.
பத்மாவதி படம் வருகிற டிச., 1-ம் தேதி ரிலீஸாகிறது.