ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி உள்ள படம் பத்மாவதி. ராஜஸ்தான் மாநிலம் சித்தூரை ஆண்ட ராஜபுதனத்து மகாராணி பத்மாவதி, டில்லியை ஆண்ட முகலாய மன்னர் அலாவுதீன் கில்ஜி ஆகியோரின் வாழ்க்கையை கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. பத்மாவதியாக தீபிகா படுகோனேவும், அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் மகாராணி பத்மாவதி தவறாக சித்தரிக்கப்படுவதாக கூறி ராஜபுதனத்து சமூகத்தினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. வருகிற டிசம்பர் 1ம் தேதி படம் வெளிவருகிறது.
இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலம், கோதா நகரில் உள்ள ஒரு தியேட்டரில் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜ்பத்கானி சேனா என்ற அமைப்பினர் தியேட்டருக்கு வெளியே போராட்டம் நடத்தினர். அப்போது தியேட்டர் கல்வீசி தாக்கப்பட்டது. இதனால் விழா பாதியிலேயே நிறுத்தப்பட்டது. போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர்.
இதுகுறித்து தீபிகா படுகோனே கூறியதாவது: தீவிர ஆய்வுக்கு பிறகு தணிக்கை குழு சான்றிதழ் அளித்துள்ளது. அதனால் படம் வெளிவந்தே தீரும். போராட்டங்களால் படத்தை நிறுத்தவும் முடியாது. எங்களை பயமுறுத்தவும் முடியாது. பத்மாவதியாக நடித்ததை பெருமையாக நினைக்கிறேன். அவர் வாழ்க்கை அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் படமாக எடுத்துள்ளோம். என்றார்.