ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தாரை தப்பட்டை படத்திற்கு பிறகு பாலா தனது பி ஸ்டூடியோவிற்காக தயாரித்து இயக்கும் படம் நாச்சியார். இதில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார்கள். இளையராஜா இசை அமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.
பாலா இதுவரை படம் பற்றிய தகவல் எதையும் வெளியிடவில்லை. ஜோதிகாவும், ஜி.வி.பிரகாசும் அக்கா தம்பியாக நடிக்கிறார்கள் என்ற தகவல் மட்டும் வெளிவந்தது. இந்த நிலையில் நேற்று படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. 52 விநாடிகள் கொண்ட டீசரில் படம் எத்தகையது என்பதை கணிக்க முடிகிறது. அதேசமயம் டீசரில் இடம்பெற்றிருந்த கெட்ட வார்த்தை கடும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
ஒரு பெண் போலீஸ் அதிகாரி எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பேசும் படமாக இருக்கும் என்று தெரிகிறது. அதேசமயம், உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட சைக்கலாஜிக்கல் திரில்லர் வகை படம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
பொதுவாக தணிக்கை அதிகாரிகள் அனுமதிக்காத வார்த்தைகள் இந்த டீசரில் இடம் பெற்றுள்ளது. அதுவும் ஜோதிகா, அந்த கெட்ட வார்த்தையை பேசியிருப்பது சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பொதுவாக பாலா படம் என்றாலே ஏதாவது சர்ச்சைகள் இருக்கும். அது நாச்சியார் படத்திலும் தொடருகிறது.