ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
வினோத் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்கும் 'தீரன் அதிகாரம் ஒன்று' படம் நாளை மறுநாள் நவம்பர் 17ம் தேதி வெளியாகிறது. இப்படம் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு 'காக்கி' என்ற பெயரில் வெளியாக உள்ளது. ஆனால், தெலுங்குப் படத்திற்கு நேற்று வரை தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை. இன்று காலைதான் படத்திற்கு யு-ஏ சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். அதனால், தெலுங்கு வெளியீட்டுக்கு வந்த சிக்கல் போனது.
இப்போது ஒரே சமயத்தில் ஒரு படத்தின் இரண்டு மொழிகளுக்கான தணிக்கை பெறுவது சுலபமாக இல்லை. தணிக்கை குழுவினர் மிகவும் கெடுப்பிடி செய்வதாக திரைப்படத் துறையில் தெரிவிக்கிறார்கள். அந்த சிக்கலால்தான் 'மெர்சல்' படம் கூட தெலுங்கில் மூன்று வாரங்கள் கழித்து வெளியானது. இல்லையென்றால் தமிழில் வெளிவந்த போது அந்த படம் தெலுங்கில் வெளிவந்திருந்தால் இன்னும் பெரிய வசூலைப் பெற்றிருக்கும்.
பொங்கலுக்கு வெளிவருவதாகச் சொல்லப்படும் படங்களின் தணிக்கை விண்ணப்பத்தைக் கூட டிசம்பர் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமாம். அப்போதுதான் பொங்கலுக்கு முன்பாகவே அந்தப் படங்களுக்குத் தணிக்கை சான்றிதழ் கிடைக்குமாம்.
தணிக்கைத் துறையின் இந்த கெடுபிடிகள் குறித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் இன்னும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு உள்ளது.