மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? |
வினோத் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்கும் 'தீரன் அதிகாரம் ஒன்று' படம் நாளை மறுநாள் நவம்பர் 17ம் தேதி வெளியாகிறது. இப்படம் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு 'காக்கி' என்ற பெயரில் வெளியாக உள்ளது. ஆனால், தெலுங்குப் படத்திற்கு நேற்று வரை தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை. இன்று காலைதான் படத்திற்கு யு-ஏ சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். அதனால், தெலுங்கு வெளியீட்டுக்கு வந்த சிக்கல் போனது.
இப்போது ஒரே சமயத்தில் ஒரு படத்தின் இரண்டு மொழிகளுக்கான தணிக்கை பெறுவது சுலபமாக இல்லை. தணிக்கை குழுவினர் மிகவும் கெடுப்பிடி செய்வதாக திரைப்படத் துறையில் தெரிவிக்கிறார்கள். அந்த சிக்கலால்தான் 'மெர்சல்' படம் கூட தெலுங்கில் மூன்று வாரங்கள் கழித்து வெளியானது. இல்லையென்றால் தமிழில் வெளிவந்த போது அந்த படம் தெலுங்கில் வெளிவந்திருந்தால் இன்னும் பெரிய வசூலைப் பெற்றிருக்கும்.
பொங்கலுக்கு வெளிவருவதாகச் சொல்லப்படும் படங்களின் தணிக்கை விண்ணப்பத்தைக் கூட டிசம்பர் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமாம். அப்போதுதான் பொங்கலுக்கு முன்பாகவே அந்தப் படங்களுக்குத் தணிக்கை சான்றிதழ் கிடைக்குமாம்.
தணிக்கைத் துறையின் இந்த கெடுபிடிகள் குறித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் இன்னும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு உள்ளது.