ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
நடிகர் கமல்ஹாசன் இந்துத்துவா தீவிரவாதம் பற்றி பேசிய கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், நாடு முழுக்க பெரும் விவாதத்திற்கு உள்ளாகின. அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டன. இன்னும் சிலர் அவரை கொல்ல வேண்டும் என்று கூட சொன்னார்கள். இந்நிலையில் அவர் எழுதி வரும் வார இதழ் தொடரில் இந்தவாரம் அதற்கு பதில் அளித்துள்ளார். அதில்,
மதம் குறித்து நான் பேசியதற்கு நாலாபக்கமும் விவாதங்கள். என் பேச்சில் கடின தொனி இருப்பதாக ஊடகங்கள் எடுத்து வைக்கின்றன. நான் எல்லாத் தீவிரவாதத்தையும் எதிர்க்கிறேன். எம்மதமாக இருந்தாலும் அதன்பேரில் தீவிரவாதம் வரும்பட்சத்தில் எனக்குச் சம்மதம் இல்லை. மதங்கள் எதிலும் போர் தொடுக்கச் சொல்லவேயில்லை. எல்லா மதங்களும் அன்பையும், அமைதியையும் தான் போதிக்கின்றன.
இவ்வாறு கமல் கூறியுள்ளார்.