ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
இன்றைக்கு சின்னத்திரை சீரியல்கள் மிகவும் பிரபலம், ராதிகா, குஷ்பு, ரம்யா கிருஷ்ணன், தேவயானி என சினிமாவில் முன்னணியில் இருந்த நடிகைகள் சீரியல் நாயகியாக நடித்தார்கள், நடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் முதல் சீரியல் ஹீரோயின் கமலா காமெஷ் என்பது பலருக்கும் ஆச்சர்யம் தரும் செய்தியாக இருக்கும். ஆனால் அதுதான் உண்மை.
முதலில் கமலா காமேஷ் பற்றி பார்ப்போம். சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த கமலா காமேஷ். அப்போது மேடை கச்சேரி நடத்துவதில் புகழ்பெற்ற காமேஷின் மனைவி. கணவரின் இசை நிகழ்ச்சியல் பாடிக் கொண்டிருந்தவர் கணவரின் நண்பர் ஜெயபாரதி இயக்கிய குடிசை படத்தில் குப்பத்து பெண்ணாக நடித்தார். அதன் பிறகு விசு நடத்திய நாடகங்களில் நடித்த கமலா கமேஷ், பாரதிராஜாவின் கண்களில் பட்டு அலைகள் ஓய்வதில்லை படத்தில் கார்த்தியின் அம்மாவாக நடித்தார். அதன் பிறகு தென்னந்திய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் அம்மாவாக நடித்து விட்டார்.
அதற்கு முன்னதாக தூர்தர்சன் பொதிகை தொலைக்காட்சி கருப்பு வெள்ளையில் இருந்து கலருக்கு மாறிய பிறகு தொடர்களை தயாரித்து ஒளிபரப்ப ஆரம்பித்தது. தூர்தர்ஷனில் ஒளிபரப்பான முதல் தொடரான ஒரு மீனின் கண்ணீர் என்ற தொடரின் நாயகி கமலா காமேஷ்.