ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
நடிகை அமலா பால் ஒரு கோடியை தாண்டிய மதிப்புள்ள சொகுசு கார் ஒன்றை வாங்கி அதனை போலி ஆவணங்கள் மூலம் புதுச்சேரியில் பதிவு செய்து வரிஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய எர்ணாகுளம் போக்குவரத்து துறை அதிகாரிகள், கார் பதிவின் ஆவணங்களுடன் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினார்.
ஆனால், அமலாபாலுக்கு பதிலாக அவரது வழக்கறிஞர் ஆஜராகி ஆவணங்களை ஒப்படைத்தார். அந்த ஆவணங்களில் புதுச்சேரியில் குடியிருப்பதாக வழங்கிய ஆவணம் மட்டும் போலியானது என்று கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து அமலாபாலே நேரில் வந்து விளக்க வேண்டும் என்று அதிகாரிகள் மீண்டும் சம்மன் அனுப்பினர்.
ஆனால் அஜராக மறுத்த அமலாபால், "நான் ஒரு இந்திய பிரஜை இந்தியா முழுவதும் சுற்றித் திரிகிறவள். நான் வாங்கிய காரை எந்த மாநிலத்திலும் பதிவு செய்ய எனக்கு உரிமை உண்டு. இந்த ஆண்டு மட்டும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வரி செலுத்தியிருக்கும் என்னை இப்படி டார்ச்சர் செய்யலாமா. என் பெயரை விளம்பரத்துக்காக பயன்படுத்துகிறார்கள்" என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் அமலா பால் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு கேரள போக்குவரத்து துறை ஆணையாளர் அனில்காந்த் கொச்சி குற்றப்பிரிவு ஐஜி ஸ்ரீஜித்துக்கு உத்தரவிட்டுள்ளார். அமலாபால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டால் அவர் கைது செய்யப்படவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.