ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரஜினி ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். குறிப்பாக பாபாஜி மீது.. பாபாஜி தியானம் செய்த குகையில் தியானம் செய்வதற்காக அடிக்கடி ரஜினி இமயமலைக்குச் செல்வார். உடல்நலக்குறைவு காரமாண கடந்த சில வருடங்களாக செல்லவில்லை.
பாபாஜி குகைக்கு செல்கிறவர்கள் 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊரில்தான் தங்க முடியும். குகை அருகில் தங்க வசதி இல்லை. இதனால் ரஜினியும் அவரது நண்பர்களும் இணைந்து பாபா குகை கோவிலில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் ஸ்ரீபாபாஜி தியான நிலையம் கட்டி உள்ளனர். இதில் 30 பேர் வரை தங்கிக் கொள்ளவும், தியானம் செய்யவும், உணவு தயாரிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. பிற்காலத்தில் இதனை விரிவுபடுத்தும் திட்டம் உள்ளது.
இதன் திறப்பு விழா நடந்தது இதில் ரஜினியின் நண்பர்கள் வி.எஸ்.ஹரி, வி.டி.மூர்த்தி, வழக்கறிஞர் விஸ்வநாதன், ஸ்ரீதர் ராவ், டாக்டர் திலீபன், மும்பை வைத்தீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 2.ஓ, மற்றும் காலா பட வெளியீட்டுக்கு பிறகு மார்ச் மாதம் ரஜினி இந்த தியான நிலையத்திற்கு செல்ல இருக்கிறார்.