ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'காற்று வெளியிடை' படத் தோல்விக்குப் பிறகு மணிரத்னம் அடுத்து இயக்க உள்ள படத்தில் ஜோதிகா, சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளார்கள். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களிலேயே பலர் நடிப்பதால் ஒருவர் சரியாக படப்பிடிப்புக்கு வரவில்லை என்றால் கூட படத்தைத் திட்டமிட்டபடி முடிக்க முடியாது.
மணிரத்னம் படத்தில் சிம்பு நடிக்கிறார் என்றதுமே பலரும் ஆச்சரியப்பட்டார்கள். சிம்பு அவருடைய அப்பா தயாரித்த படப்பிடிப்புக்கே சரியாகப் போக மாட்டார். அவரை நம்பி எப்படி மணிரத்னம் அவருடைய படத்தில் ஒப்பந்தம் செய்தார் என்றெல்லாம் கோலிவுட்டில் கேள்விகள் எழுந்தன. அதனால் மணிரத்னம் ஒப்பந்தம் போடும் போதே படப்பிடிப்புக்கு சொன்னபடி சரியான நேரத்தில் வர வேண்டும் என்ற ஒரு கண்டிஷனை சேர்த்திருக்கிறாராம்.