அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
மலையாளத்தில் முன்னணி ஹீரோவாக விளங்கும் துல்கர் சல்மான், பாலாஜி மோகன் இயக்கத்தில் 'வாயை மூடி பேசவும், மணிரத்னம் இயக்கத்தில் 'ஓகே கண்மணி' ஆகிய தமிழ் படங்களில் நடித்தார். இவற்றில் துல்கர் சல்மானின் முதல் தமிழ்ப்படமான வாயை மூடி பேசவும் படம் தோல்வியடைந்தது. ஓகே கண்மணி வெற்றியடைந்தது.
துல்கர் நடித்த ஸோலோ சமீபத்தில் தமிழில் டப் செய்யப்பட்டது. ஒரு நாள் கூட ஓடவில்லை. இந்நிலையில் 'கோலிசோடா, 'பத்து எண்றதுக்குள்ள' ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய தேசிங்கு பெரியசாமி என்ற புதுமுக இயக்குநர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் துல்கர் சல்மான்.
இந்தப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்த திருடா திருடா படத்தின் பாடல் வரியான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. 'துருவநட்சத்திரம்' படத்தில் விக்ரம் ஜோடியாக நடித்து வருபவருமான ரீத்துவர்மா இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
காதலும், சாகசங்களும் நிறைந்த பயண கதையான இதில் துல்கர் சல்மான் சாப்ட்வேர் என்ஜினியராக நடிக்கிறார். மலையாளத்தில் பல படங்களை தயாரித்த ஆண்டோ ஜோசப் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு டில்லியில் துவங்கி தொடர்ந்து நடைபெறவிருக்கிறது.