ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
மலையாள நடிகரும், பிரபல நடிகர் பிருத்விராஜின் சகோதரருமான இந்திரஜித், கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிவரும் 'நரகாசூரன்' படத்தில் 'லட்சுமன்' என்கிற முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். மலையாள படங்களில் இவர் அதிகம் ஏற்று நடித்த போலீஸ் வேடம் தான் இதிலும் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. விஷ்ணுவர்தனின் 'சர்வம்' படத்தில் ஆர்யாவின் நண்பராக தலைகாட்டியவருக்கு தமிழில் இது இரண்டாவது படம்..
இந்தப்படத்தில் தனது போர்ஷனை முடித்துவிட்ட இந்திரஜித், “நரகாசூரன் படத்தில் பணிபுரிந்தது ஒரு அற்புதமான அனுபவம்.. புதிய சினிமா மொழியில் இதன் கதையும் பட உருவாக்கமும் அமைந்துள்ளது. பார்வையாளர்களை பல ஆச்சர்யங்களுக்கு இந்தப்படம் ஆளாக்கும்” என படத்தை பற்றி சிலாகித்து பேசியுள்ளார் இந்திரஜித்.