ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த வெள்ளியன்று நயன்தாரா நடித்த 'அறம்' படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னும் ஆழ்துளாய் கிணற்றில் விழுந்த குழந்தைகளை காப்பாற்ற நிரந்தர தீர்வு கண்டுபிடிக்க முடியாத முக்கியமான பிரச்னையை மிகவும் தைரியமாக சொல்லியிருந்தார் இயக்குனர் கோபி நயினார்.
இதில் கலெக்டராக நடித்திருந்த நயன்தாராவின் நடிப்பும் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது., திரையுலகை சேர்ந்த பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வரும் நிலையில் நடிகை அமலாபாலும் 'அறம்' படத்தை பாராட்டியுள்ளார். இதுகுறித்து அமலாபால் தன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது...
“ஆக.. நல்ல படம் ஜெயிக்கும் என்பது நிரூபணமாகி இருக்கிறது. இயக்குனர் கோபி நயினார், நயன்தாராவுக்கு எனது பாராட்டுக்கள். ஸ்டார் ஹீரோக்களுக்காக மசலாத்தனாமாக பண்ணப்படும் படங்கள் நிறைந்த இந்த சினிமாவில் அந்த பார்முலா தவறு என நிரூபித்துள்ளது இந்தப்படம். நல்ல சினிமா, நல்ல கதை, நல்ல நடிப்பு, இதுதான் முக்கிய விஷயமே” என சந்தடி சாக்கில் முன்னணி ஹீரோக்களின் படங்களையும் 'உரசி'யிருக்கிறார் அமலாபால்.