சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது |
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த விஜய் ரசிகர் ஸ்ரீதாத் என்பவர் மெர்சல் படத்திற்காக விஜய்யின் கட்வுட் கட்டும் பணியில் இருந்தபோது விபத்தில் சிக்கி இறந்தார். அவரது குடும்பத்தினருக்கு விஜய் சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது. இந்த உதவியை வழங்குவதற்காக திருவனந்தபுரம் சென்றிருந்த விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் திருவனந்தபுரம் பிரஸ் கிளப்பில் பத்திரிகையாளர் முன்னிலையில் நிவாரணத் தொகையை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாட்டில் பெரும்பாலான நடிகர்களுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டையும் தாண்டி கேரளாவில் விஜய்க்கு உயிரைக் கொடுக்கிற ரசிகர்கள் இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. எவ்வளவு நிதி கொடுத்தாலும் அது ஸ்ரீநாத்தின் உயிருக்கு ஈடாகாது. அந்த குடும்பத்தின் மகனாக விஜய் இருப்பார் என்றார்.
பின்னர் விஜய்யின் அரசியல் பிரவேசம் பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது "விஜய் அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்பது பற்றி எனக்குத் தெரியாது. காலம் அவரை எப்படி மாற்றும் என்பதை யாராலும் கணிக்க முடியாது" என்றார்.
மெர்சலுக்கு எதிரான போராட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் "மத்திய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி விதிப்பால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதைத்தான் மெர்சல் படத்தில் வசனமாக வைத்தனர். அதில் ஜிஎஸ்டி பற்றி தவறாக எதுவும் கூறவில்லை. ஆனால் தவறான கருத்துக்கள் இடம்பெற்றதாக கூறி நடத்தப்பட்ட போராட்டங்களால் படத்துக்கு நல்ல பெயர் கிடைத்தது" என்றார்.