ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் சினிமாவோ, தெலுங்கு சினிமாவோ எல்லா இந்திய சினிமாவும் சென்டிமென்ட்டுக்குள் சிக்கியவைதான். எந்தக் கூட்டணி வெற்றியாக இருக்கிறதோ அதை விடாமல் தொடர்ந்து கொண்டே இருப்பார்கள். பெயர் வைப்பதில் கூட நியூமராலஜி பார்த்து வைப்பார்கள். பட பூஜை, இசை வெளியீடு, பத்திரிகையாளர் சந்திப்பு, டீசர், டிரைலர் வெளியீடு எல்லாமே நல்ல நாள், நேரம் பார்த்து மட்டுமே நடக்கும்.
தமிழ் சினிமாவில் பல திறமையான நடிகைகள் வந்தாலும் அவர்கள் நடித்த படங்கள் ஓடவில்லை என்று சொல்லி அவர்களை ராசி இல்லாத நடிகை என முத்திரை குத்தி ஓரம் கட்டி விடுவார்கள். இதற்கு பலரை உதாரணமாகச் சொல்லலாம். சமீபத்தில் அப்படி ஒரு ராசியைப் பெற்ற நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர் தமிழில் நடித்த 'என்னமோ ஏதோ, புத்தகம், ஸ்பைடர்' ஆகிய படங்கள் எதுவுமே ஓடவில்லை. ஆனால் தெலுங்கில் அவர் நடித்த பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன.
ரகுல் ப்ரீத் அடுத்து நாயகியாக நடித்துள்ள 'தீரன் அதிகாரம் ஒன்று' படம் வரும் 17ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்திலாவது அவருடைய ராசியை மீறி ரகுல் ப்ரீதி சிங் வெற்றி பெறுவாரா எனப் பார்க்க வேண்டும். அப்போதுதான் அவருக்கு அடுத்த விஜய் படத்தில் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும். இல்லையென்றால் ஏ.ஆர்.முருகதாஸ், 'ஸ்பைடர்' பட ராசியை மனதில் வைத்துக் கொண்டு அவரை ஒப்பந்தம் செய்யாமலே போய்விடுவார்.