ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமீபத்தில் வெளியான நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் சந்தீப் கிஷன் தங்கையாகவும், விக்ராந்த்தின் காதலியாகவும் நடித்திருந்தவர் ஷாதிகா. இவர் 2 வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்போது ஹீரோயினாக வளர்ந்திருக்கிறார்.
அரிராஜனின் மங்கை தொலைக்காட்சித் தொடரில் நடித்த போது இவருக்கு இரண்டு வயது. சீமானின் வீர நடை படம் தான் முதல் சினிமா அனுபவம். அப்போது வயது இரண்டரை தான். அதன் பிறகு ஆளும் வளர வாய்ப்புகளும் பெருக ரோஜா வனத்தில் குட்டி லைலா, குபேரனில் கெளசல்யா வின் மகள், சமஸ்தானத்தில் சரத்தின் மகள், ராமச்சந்திராவில் சத்யராஜின் மகள், ஆனந்தம் முரளியின் மகள், என்று வளர்ந்து குருவியில் விஜய்யின் தங்கையாகி, மாசிலாமணியில் சுனைனாவின் தங்கை என 30 படங்கள் நடித்து விட்டார்.
தொலைக்காட்சியில் சித்தி தொடரில் வில்லி யுவராணியின் மகள், கோலங்கள் தொடரில் தொல்காப்பியனின் சிறுவயது தங்கை என்று நடித்தும் உள்ளவர். சுட்டி டிவியில் சுட்டி தொகுப்பாளராக மூன்று ஆண்டுகள் அனுபவம். அது மட்டுமல்ல குழந்தை நட்சத்திரங்களுக்கெல்லாம் பின்னணிக் குரலும் கொடுத்திருக்கிறார். சில குறும்படங்களிலும் நடித்துள்ளார். நடிகை ரேவதி இயக்கிய குறும்படமான கயல்விழியில் ஷாதிகா தான் கயல்விழி.
"சிறு வயதில் குழந்தையாக பல படங்களில் நடித்திருக்கிறேன். சற்று வளர்ந்த பெண்ணாக நான் மகான் அல்ல படத்தில் நடித்தேன். அந்த வாய்ப்பு எனக்கு பெரிய பிரேக். பாயும் புலி படத்தில் விஷாலின் தங்கை, மாவீரன் கிட்டு-வில் ஸ்ரீதிவ்யாவின் தோழியாக நடித்தேன். இப்போது நெஞ்சில் துணிவிருந்தால் இரண்டாவது நாயகியாக நடித்திருக்கிறேன்.
நான் நாயகி, குணச்சித்திரம் எனப் பிரித்துப் பார்ப்பதில்லை. பத்து நிமிடம் வந்தாலும் மனதில் பதிகிற வாய்ப்பில் நடிக்கவே விரும்புவேன். அதில் தான் எனக்கு மகிழ்ச்சி. விரைவில் ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறேன். அதற்கான அறிவிப்பை தயாரிப்பு தரப்பிலிருந்து வெளியிடுவார்கள். என்கிறார் ஷாதிகா.