ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அடுத்து வெளிவரும் விஷால் படம் இரும்புத்திரை. பொங்கலுக்கு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மித்ரன் இயக்கும் இந்தப் படத்தில் விஷாலுடன் சமந்தா, ரோபோ சங்கர், வின்செண்ட் அசோகன் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஜார்ஜ் ஜி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார், யுவன் இசை அமைக்கிறார். விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கிறது. தற்போது இதன் இறுதிகட்ட படப்பிடிப்புகள் நடந்து வருகிறது.
படத்தில் அர்ஜுன் வில்லனாக நடித்து வருகிறார். விஷால் அர்ஜுன் இயக்கிய படங்களில் துணை இயக்கனராக பணியாற்றியவர். இப்போது இருவரும் இணைந்து நடித்து வருகிறார்கள். இதுகுறித்து விஷால் கூறியிருப்பதாவது:
என்னுடைய திரையுலக வாழ்க்கையே ஒரு வட்டமாகத் தான் தெரிகிறது. நான் யாரிடம் முதலில் உதவி இயக்குநராக சேர்ந்து என் வாழ்க்கையின் முதல் ஊதியத்தை பெற்றோனோ அவரே எனக்கு வில்லனாக இரும்பு திரை படத்தில் நடிக்கிறார். எனக்கு ஊதியம் கொடுத்தவருக்கு நான் ஊதியம் கொடுக்கிறேன். ஆனாலும் இப்போதும் அவர் தான் எனக்கு குரு. அவர் தான் அர்ஜுன். இது ஒரு உயிரோட்டமான பயணம். நாங்கள் படத்தில் சந்தித்துக்கொள்ளும் காட்சிகள் அனைத்துமே ரசிகர்களை சீட் நுனிக்கே கொண்டு வரும். முக்கியமாக க்ளைமாக்ஸில் நாங்கள் இருவரும் மோதிக்கொள்ளும் சண்டைக்காட்சி படமாகி வருகிறது. எங்கள் இணையைக் காண காத்திருங்கள். என்கிறார் விஷால்.