ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கெளதம் கார்த்திக் நடித்த அடல்ட் ஒன்லி படம் ஹர ஹர மகாதேவகி. சந்தோஷ் ஜெயகுமார் இயக்கிய அந்த படத்தில் நிக்கி கல்ராணி நாயகியாக நடித்திருந்தார். செப்டம்பர் 29-ந்தேதி ரிலீசான அந்த படம் வசூல்ரீதியாக வெற்றி பெற்றது. அதனால் இப்போது மீண்டும் அதே யூனிட் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் இணைகிறது.
ஆனால் ஹர ஹர மகாதேவகி படத்தில் நடித்து அடல்ட் பட நடிகை என்கிற முத்திரையில் விழுந்து விட்ட நிக்கி கல்ராணியோ, தொடர்ந்து அந்த மாதிரி கதையில் நடித்தால் தன்னை ஆபாச பட நடிகையாக்கி விடுவார்கள் என்று இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடிக்க அழைத்தபோது மறுத்து ஓட்டம் பிடித்து விட்டார்.
அதனால் அந்த படத்தில் நடிக்க சில நடிகைகளை அழைத்துபோது அடல்ட் படம் என்றதும் நழுவிச்சென்ற நிலையில், சந்தானத்துடன் சர்வர் சுந்தரம், சக்க போடு போடு ராஜா படங்களில் நடித்துள்ள வைபவி சாண்டில்யா கமிட்டாகியிருக்கிறார். அவரைத் தொடர்ந்து இப்போது யாஷிகா ஆனந்த், சந்த்ரிகா ரவி என மேலும் இரண்டு நடிகைகளும் தற்போது ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்கள். ஆக, இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் கெளதம் கார்த்திக்குடன் மூன்று நாயகிகள் நடிக்கிறார்கள்.