ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பொதுவாக வட இந்திய நடிகைகள் யாருமே தமிழ்ப்படங்களில் நடிக்கும்போது சொந்தக்குரலில் டப்பிங் பேச ஆர்வம் காட்டுவதில்லை. ஜோதிகா பிசியான நடிகையாக இருந்தபோது மாயாவி படத்தில் சொந்தக்குரலில் பேசினார். அதன் பிறகு சொந்தக்குரலில் பேசி நடித்த வட இந்திய நடிகை தமன்னாதான்.
இருபத்துக்கும் மேற்பட்ட தமிழ்ப்படங்களில் நடித்துள்ளார் தமன்னா. அவர் சொந்தக் குரலில் பேசி நடித்த ஒரே படம் சீனுராமசாமி இயக்கத்தில் வெளியான 'தர்மதுரை' படம்தான். இந்த படத்தை தொடர்ந்து தமன்னா நடிப்பில் 'தேவி', 'கத்திச்சண்டை' ஆகிய படங்கள் வெளியாகின. அவற்றில் எல்லாம் தமன்னாவுக்கு இரவல் குரல்தான்.
இந்த படங்களை தொடர்ந்து இப்போது விஜய் சந்தர் இயக்கத்தில் 'ஸ்கெட்ச்' என்ற படத்தில் நடித்துள்ளார் தமன்னா! விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தின் டப்பிங் உட்பட படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் தற்போது வேலைகள் நடந்து வருகின்றன. 'தர்மதுரை'யில் சொந்த குரலில் பேசி நடித்த தமன்னாவுக்கு இப்படத்தில் மானசி என்ற டப்பிங் கலைஞர் குரல் கொடுத்துள்ளார்.
'தர்மதுரை'யில் அழகாக தமிழ் பேசி நடித்த தமன்னா ஏன் தொடர்ந்து சொந்தக் குரலில் பேசி நடிக்கவில்லை?