ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஒரு நடிகரை தூக்கி வைப்பது பெரிய விஷயமல்ல, ஆனால், சுலபத்தில் அவரது ரசிகர்களே அவரை கீழேயிறக்கி விட்டுவிடுவார்கள். எதற்கு எதை முடிச்சுப் போட்டுப் பேசுவது என்பது கூடவா விஜய் ரசிகர்களுக்குத் தெரியாது. அப்படி நடந்த ஒரு விஷயத்துக்கு விஜய்தான் காரணம் என விஜய்யின் ரசிகசிகாமணிகள் சமூக வலைத்தளங்களில் கூச்சல் போட ஆரம்பித்துவிட்டார்கள். 178 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த வரி குறைப்புக்கு 'மெர்சல்' படத்தில் விஜய் பேசிய ஜிஎஸ்டி வசனம் தான் காரணம் என சிலர் பதிவிட ஆரம்பித்துவிட்டார்கள்.
ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்ட பிறகு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு விதமான பொருட்களின் வரி விகிதங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அப்படித்தான் 23வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் அசாம் தலைநகரான கவுகாத்தியில் நேற்று நடைபெற்ற போது 178 பொருட்களுக்கான வரி விகிதம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
ஜிஎஸ்டி வரி பற்றிய வசனம் விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் இடம் பெற்று பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. நேற்று நடந்த வரி குறைப்பு அறிவிப்பையும், மெர்சல் பட வசனத்தையும் முடிச்சு போட்டு விஜய் ரசிகர்கள் நேற்றே ஒரு பரப்புரையை ஆரம்பித்துவிட்டார்கள். விஜய் ரசிகர்கள் செய்யும் இந்த வேலை எங்கே போய் முடியுமோ தெரியவில்லை.