ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மெர்சல் படம் ரிலீஸ்க்கு முன்னர் தான் பல பஞ்சாயத்துகளை சந்தித்தது என்றால் படம் ரிலீஸான பின்னரும் பஞ்சாயத்து ஓய்ந்த பாடில்லை. மெர்சல் படம், ஏற்கனவே மூன்று முகம், அபூர்வ சகோதரர்கள் படடத்தின் காப்பி என்று விமர்சனம் எழுந்த நிலையில், மூன்று முகம் படத்தின் ரீ-மேக் உரிமையை வாங்கி வைத்துள்ள தயாரிப்பாளர் பைவ்ஸ்டார் கதிரேசன், தயாரிப்பாளர் சங்கத்தின் அளித்த புகாரின் அடிப்படையில் அட்லீக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அட்லீ எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
அட்லீயின் முதல் படமான ராஜா ராணி தொடங்கி, தெறி, மெர்சல் வரை அவர் மீதான விமர்சனம் ஓய்ந்தபாடில்லை. அவர் இயக்கிய மூன்று படங்களுமே மெளனராகம், சத்ரியன் மற்றும் மூன்று முகங்களின் உல்டா என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.