மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
தீபாவளியன்று வெளியான 'மெர்சல்' திரைப்படத்தில் இடம் பெற்ற 'பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி' வசனங்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தின. அதனால், படத்தை தமிழ்நாடு பாஜக பிரபமுர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். அதுவே படத்திற்கு மிகப் பெரிய பிரமோஷனைக் கொடுத்து படம் 200 கோடி வசூலைக் கடக்க உதவியது. அந்த வசனங்களை நீக்க வேண்டும் என்றெல்லாம் பேச்சு எழுந்தது, வழக்கும் போடப்பட்டது. பிரச்சனைகள் எழுந்த பின்னும், தமிழில் அந்த வசனங்கள் நீக்கப்படவில்லை.
அந்த வசனங்களால்தான் தெலுங்கிலும் 'மெர்சல்' படத்தின் டப்பிங்கான 'அதிரிந்தி' படத்திற்கு சென்சார் கிடைப்பதில் தாமதம் ஆனது. நேற்று ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் 454 தியேட்டர்களில் 'அதிரிந்தி' படம் வெளியாகியுள்ளது. தமிழில் சர்ச்சையை ஏற்படுத்திய அந்த வசனங்களை தெலுங்கில் 'மியுட்' செய்துவிட்டார்களாம். அதாவது, வடிவேலு பேசிய பணமதிப்பிழப்பு வசனமும், விஜய் கிளைமாக்சில் பேசும் ஜிஎஸ்டி பற்றிய வசனமும், ஒலியை 'கட்' செய்த பிறகே தணிக்கை வழங்கப்பட்டுள்ளதாம். இருந்தாலும், தெலுங்கில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று மட்டும் சுமார் 3 கோடி ரூபாய் வசூலித்துள்ள 'அதிரிந்தி' அடுத்த சில நாட்களில் லாபத்தைத் தர ஆரம்பித்துவிடும் என்கிறார்கள். தெலுங்கு டப்பிங் உரிமை 5 கோடி ரூபாய்க்குதான் விற்கப்பட்டுள்ளதாம். அதனால், படம் எதிர்பார்த்த லாபத்தைக் கொடுத்துவிடும் என்கிறார்கள். மொத்த வசூலாக 20 கோடி வரை கிடைத்தால் இந்த வாரம் 'மெர்சல்' படத்தின் மொத்த வசூல், தெலுங்கையும் சேர்த்து 250 கோடியைத் தாண்டிவிடும்.