ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அரசியல் பின்புலம் இருப்பதையும் தாண்டி, சினிமாவில் தனக்கென, ஓர் இடத்தை பிடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உழைக்கிறார், உதயநிதி. ஆடம்பரம், பந்தா, பகட்டு ஏதும் இல்லாமல், பக்கத்துக்கு வீட்டு பையன் போல், எளிமையாக காட்சி அளிக்கும் அவருடன் ஒரு சந்திப்பு...
இன்று வெளியாகும், இப்படை வெல்லும் படம் பற்றி சொல்லுங்க?
இயக்குனர், கவுரவ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், மொத்தம் மூன்று ஹீரோ. அதாவது, நான், சூரி, மஞ்சிமா ஆகிய மூன்று ஹீரோக்கள் தான், கதையை அடுத்தடுத்த கட்டத்திற்கு நகரும் முக்கிய கதாபாத்திரங்கள். இதில், ஐ.டி.,யில் வேலை பார்க்கும் பையனாக நடித்துள்ளேன். மூவரும் எதிர்பாராமல் ஒரு பிரச்னையில் சிக்கி, அதிலிருந்து எப்படி வெளியில் வராங்க என்பது தான், ஒன் லைன் ஸ்டோரி. ரெண்டே நாள் நடக்கும் கதை. கதையை கேட்கும் போதே, ரொம்பவும் ரசித்தேன்.
இந்த படத்திற்காக ரொம்ப அடி வாங்குனீங்க போலிருக்கே?
கதை கேட்ட போது, இவ்வளவு ஆக் ஷன் அதிரடிகளை நான் தாங்குவேனா என, தோன்றியது. ஆனால், படத்தில் ஒரே ஒரு சண்டை காட்சி தான். கதைக்களப்படி, ஒன்று என்னை யாராவது துரத்துவாங்க; இல்லை, நான் யாரையாவது துரத்துவேன். புதுச்சேரியில், நான் ஓடாத ரோடே இல்லை.டேனியல் பாலாஜி, ஆர்.கே.சுரேஷ் கிட்ட எல்லாம், உண்மையாகவே அடி வாங்கினேன். என் பையன், இந்தப் படத்தை பார்த்து, அப்பா, உன்னை விட, வில்லன் கேரக்டர் நல்லா இருக்குன்னு சொன்னான். டேனியல் பயங்கரமாக மிரட்டியிருக்கிறார். அவருக்குத்தான் ரொம்ப, பில்ட் அப் இருக்கும்.
ஜாலியான படம் பண்ணிட்டு, கொஞ்சம் ஆக் ஷன் படம் பண்ணும்போது கஷ்டமா இருக்கா?
என்ன ஒரே ஜாலியாவே நம்ம படம் இருக்கே... வேற களத்துக்கு போய் படம் பண்ணனும்னு யோசித்திருக்கிறேன். எனக்கே, அப்படிப்பட்ட படங்களை தொடர்ந்து பண்ண போர் அடித்தது. அதன்பின், அமைந்த படம் தான் மனிதன்.
சந்தானம் இடத்தில், உங்களோடு இப்போது சூரி இருக்கிறார். அவரைப் பற்றி...
அந்தந்த கதைக்கான தேவையைத் தான், இயக்குனர்கள் முடிவு செய்கின்றனர். நான் யாரையும் வற்புறுத்தி கேட்பதில்லை. இந்த படத்தில், சூரி டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக நடித்திருக்கார். அவர் சீரியசாக நடித்தாலும், படம் பார்க்கும் போது சிரிப்பு வரும். என்னுடைய அடுத்த இரு படங்களில், சூரி இல்லை.
வீட்டில், உங்கள் படங்களை பார்த்து யார் அதிகம் விமர்சிப்பர்?
என் மனைவி, ஓரளவு படம் பற்றி விமர்சனம் செய்வாங்க. ஆனால், என் சகோதரி இந்த விஷயத்தில், முகத்தில் அடித்தது போல், நிறை, குறைகளை சொல்லி விடுவார். என் படத்தை பார்த்து, இதெல்லாம் ஒரு படமான்னு, பாதியிலேயே எழுந்து போயிருக்கார். அதனால், முதலில் குடும்பத்தினரை நான் திருப்திப் படுத்தினாலேயே, பாதி வெற்றி தான்.
எந்த நடிகையுடன் நடிக்கும்போது கொஞ்சம் தடுமாறுவீங்க?
நயன்தாரா... அவங்க அனுபவத்தில், எல்லா சீனையும் ஒரே டேக்கில் முடிப்பாங்களே என்ற பயம் இருக்கும். எந்த காட்சியாக இருந்தாலும், ரொம்ப உணர்ந்து நடிப்பாங்க. இப்ப வரும் எல்லா நடிகையும், முடிந்தவரை சிறப்பா பண்றாங்க. டான்ஸ் என்றால் தான், ரொம்ப பயப்படுவேன். நான் ஆடியதை எல்லாரும் கிண்டலடித்ததாலேயே, சிறப்பாக ஆட வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டு, இப்போது கொஞ்சம், ஓகேவா ஆடுறேன்னு நினைக்கிறேன்.
அரசியல், சினிமா எதில் ஈசியாக வந்திடலாம்னு நினைக்கிறீங்க?
ரெண்டுமே கொஞ்சம் கஷ்டம் தான். சினிமாவில் நல்ல படங்களாக, கதைகளாக தேர்வு செய்யணும்; அதை மக்கள் விரும்பணும். அரசியலும், சாதாரண விஷயம் இல்லை. மக்கள் முடிவு பண்றது தான். எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்காமல் உழைக்கணும் என்பது தான், இங்கே முக்கியம்.
அப்பாவோட, ஜிம் வீடியோ வைரலாச்சே?
ஆமாம்... அதைப் பார்த்து, எனக்கே கொஞ்சம் வெட்கமாகத்தான் இருக்கு. இவ்வளவு பிசியான வாழ்க்கையிலும், காலையில் நேரத்திற்கு எழுந்து, அப்பா உடற்பயிற்சி செய்யப் போகிறார். உடம்பை பராமரிக்க மெனக்கிடுறார். ஆனால், என்னால் முடியலையே!
உங்க தாத்தா பற்றி?
இப்போது கொஞ்சம், உடல் நலம் குணமாகி வருகிறார். அவர் உழைப்புக்கு முன்னாடி, நம்மால் நிற்கக்கூட முடியுமான்னு தெரியலை. நான் படிக்கும்போது, தமிழில் அதிகம் மார்க் வாங்குவேன். என் கையெழுத்தும் நல்லா இருக்கும். அதற்குக் காரணம், தாத்தா தான். அவருக்கு, நினைவு சக்தி ரொம்ப அதிகம். அதைப் பார்த்து, நான் பிரமித்து இருக்கிறேன்.