பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
பர்பி படத்துக்கு பின், பாலிவுட்டில் மிகவும் பிசியான நடிகையாகி விட்டார், இலியானா. நடிப்பதை தவிர, சத்தமில்லாமல், பல சமூக பணிகளிலும் ஆர்வமாக செயல்படுகிறார். மன உளைச்சலுக்கு ஆளாகும் பெண்களை, அதிலிருந்து மீட்பது குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்படுகிறார்.
'சில மாதங்களுக்கு முன், எனக்கும் கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டது. அதிலிருந்து எப்படி மீள்வது என்றே தெரியவில்லை. ஒரு கட்டத்தில், தற்கொலை செய்து கொள்ளலாமா என்று கூட யோசித்தேன். அப்போது தான், இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிலரது உதவி கிடைத்தது; அதற்கு பின் தான், என் மனநிலை மாறியது' என்கிறார், இலியானா.
'உங்கள் அழகு, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறதே எப்படி?' என, கேட்டபோது, 'வீட்டை விட்டு வெளியில், ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டுமானால், அதற்கு முன், இரண்டு மணி நேரம், 'மேக் அப்' போடுவேன்; அதனால், நான், அழகாக தெரிந்திருக்கலாம்' என, சிரிக்கிறார், இலியானா.