ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பசங்க படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாண்டிராஜ். முதல் படத்திலேயே தேசிய விருதுகளை குவித்தவர், அதன்பின்னர் சில படங்களை இயக்கினார். தற்போது கார்த்தியை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். இப்படத்தை கார்த்தியின் அண்ணனும், நடிகருமான சூர்யா, தனது 2டி நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார்.
கார்த்தி ஜோடியாக வனமகன் சாயிஷா நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ், பொன்வண்ணன், சூரி, ஸ்ரீமன், பானுப்ரியா, ரமா, மௌனிகா, இளவரசு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். பெரிய பட்ஜெட்டில் தயாராகும் இந்தப் படம் காமெடி கலந்த ஆக்ஷ்ன் படமாக உருவாகிறது.
இதன் பட பூஜை முறைப்படி இன்று(நவ., 9) துவங்கியது. சூர்யாவின் தாயார் லட்சுமி சிவகுமார் குத்துவிளக்கேற்றி படப்பிடிப்பை துவக்கி வைத்தார். தொடர்ந்து சென்னையில் 5 நாட்களும், அதனைத்தொடர்ந்து தென்காசியில் 40 நாட்களும் படப்பிடிப்பு நடக்கிறது.