ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் சினிமாவின் முதல் பின்னணி பாடகி பி.ஏ.பெரிய நாயகி. அவர் முதல் பின்னணி பாடகியானது சுவையான ஒரு நிகழ்வின் மூலம்தான்.
ஏ.வி.எம் நிறுவனம் 1945ம் ஆண்டு ஸ்ரீவள்ளி படத்தை தயாரித்தது. இதில் டி.ஆர்.மகாலிங்கமும், குமாரி ருக்மணியும் நடித்தனர். படத்தில் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. படம் முடிந்து படப்பெட்டிகள் எல்லா தியேட்டர்களுக்கும் அனுப்பப்பட்டுவிட்டது. படத்தை மீண்டும் ஒரு முறை பார்த்த தயாரிப்பாளர் ஏ.வி.மெய்யப்ப செட்டியாருக்கு குமாரி ருக்மணியின் பாடல்கள் திருப்தியாக இல்லை. டி.ஆர்.மகாலிங்கத்தின் கணீர் குரலுக்கு ஈடுகொடுக்கும் வகையில் இல்லை.
இதனால் தியேட்டர்களுக்கு அனுப்பபட்டிருந்து படப் பெட்டிகள் அனைத்தையும் திரும்ப கொண்டுவருமாறு உத்தரவிட்டார். அப்போது பாடகியும், நடிகையுமாக இருந்த பி.ஏ.பெரிய நாயகியை அழைத்து ருக்மணி பாடிய அனைத்து பாடல்களையும் அவரை பாடச் செய்தார். அப்போதுதான் போஸ்ட் சிங்க்ரனைசன் என்ற பதிவு தொழில்நுட்பம் அறிமுகமாகியிருந்தது. அந்த தொழில்நுட்பத்தின் மூலம் ருக்மணி பாடல்களுக்கு பதிலாக பிலிமில் பி.ஏ.பெரிய நாயகியின் பாடலை சேர்த்து படப்பெட்டிகளை திரும்ப அனுப்பினார். படம் பெரிய வெற்றி வெற்றது. பெரிய நாயகி முதல் பின்னணி பாடகி ஆனார்.
பி.ஏ.பெரிய நாயகி 'கீதகாந்தி', 'பஞ்சாமிர்தம்', 'என் மனைவி', 'மனோன்மணி', 'மகாமாயா' 'பிரபாவதி', 'கிருஷ்ண பக்தி', 'தர்மவீரன்', 'ஏகம்பவாணன்', 'ருக்மாங்கதன்' உட்பட பல படங்களில் நடித்திருந்தார். புதிய இளம் நடிகைகள் வருகைக்கு பிறகு நடிப்பிலிருந்து விலகி பாடகியாக மட்டும் இருந்தார்.