சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
தீபாவளியன்று வெளியான 'மெர்சல்' திரைப்படம் இன்றுடன் வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தை முடிக்கிறது. இந்த 20 நாட்களில் சுமார் 240 கோடி வரை இப்படம் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன . தமிழ்நாட்டில் 'எந்திரன்' படத்தின் வசூலைக் கடந்த 'மெர்சல்' படம் வெளிநாடுகளிலும் சாதனை வசூலை படைத்து அதிக வசூலைப் பெற்ற தமிழ்ப் படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.
தமிழில் வெளியாகும் அன்றே இப்படத்தின் தெலுங்கு டப்பிங்கான 'அதிரிந்தி' படம் வெளியாக வேண்டியது. ஆனால், தணிக்கை வாங்க வேண்டியதில் காலதாமதம் ஏற்பட்டதால் பட வெளியீட்டைத் தள்ளி வைத்துவிட்டார்கள். கடந்த வாரம்தான் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைத்தது. அதன் பின் நவம்பர் 9ம் தேதி படம் வெளியாகும் என்று அறிவித்தார்கள்.
ஆந்திரா, தெலுங்கானாவில் சுமார் 400 தியேட்டர்கள் வரை இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கில் எத்தனை கோடி வசூலாகிறது என்பதைப் பொறுத்து இந்தப் படம் 'பாகுபலி 2' அல்லாத தென்னிந்திய படங்களின் வசூலில் சாதனை படைக்கவும் வாய்ப்புள்ளது. சுமார் 50 கோடி வசூலித்தாலே 300 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிவிடும். தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த இந்தப் படம் தெலுங்கு ரசிகர்களையும் கவருமா என்பது நாளை தெரிந்துவிடும்.