ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிறந்தநாளில் அரசியல் பயணத்திற்கு அச்சாரம் போட்டுள்ள கமல், தமிழகம் முழுவதும் சுற்று பயணம் செய்ய இருக்கிறார், அதோடு மக்களை இணைக்க மய்யம் விசில் என்ற புதிய ஆப்பை அறிமுகம் செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 50 ஆண்டு காலமாக சினிமாவை ஆட்சியை செய்து கொண்டிருக்கும் கமல், இப்போது அரசியல் பயணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். கடந்த சில மாதங்களாகவே, அவருடைய டுவிட்டர் கணக்கில் அரசியல் சார்ந்த, சமூக நலம் சார்ந்த பல கருத்துக்களைத் தைரியமாகப் பதிவிட்டு வருகிறார். கமல் இன்று(நவ.7) தனது 64வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளில் முக்கிய அறிவிப்பு வெளியாக இருப்பதாக கமல் அறிவித்திருந்தார். அதன்படி சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் கமல் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய கமல்ஹாசன்,
மக்கள் பிரச்னையை அறிய தமிழகம் முழுக்க சுற்றுபயணம் செய்ய இருக்கிறேன். நான் பிறந்ததற்கான காரணத்தை நிரூபிக்கும் நேரம் வந்துவிட்டது. ஒரு படம் எடுக்கவே 6 மாதம் பயிற்சி செய்பவன் நான், அரசியல் அதை விட பெரிய பணி.
அரசியல் பயணத்திற்கான நிறைய முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. அஸ்திவாரத்தை வலுவாக அமைக்க வேண்டி இருப்பதால் சில அறிஞர்களுடன் பேசி வருகிறேன், அதற்கான பணிகள் நடந்து வருகிறது.
தமிழகத்தை இயக்க வேண்டிய சக்கரம் தற்போது பழுதாகி உள்ளது. பிரச்னைகளுக்கான குரலை வலுப்படுத்த வேண்டும். நல்ல தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பது என் கனவு.
மய்யம் விசில் என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது நியாயத்திற்கான குரல் எழுப்பும் கருவியாக இருக்கும்.
இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கமல்...
பிராமண சமுதாயத்தை தேடி நான் சென்றது இல்லை. என்னுடைய நண்பர்கள் அனைத்து சமுதாயத்திலும் இருக்கின்றனர். என்னை நாத்திகன் என அழைப்பதை நான் ஏற்கவில்லை, பகுத்தறிவாளன் என்பதையே விரும்புகிறேன். நான் பிறந்த குலத்திலிருந்து விலகி வந்தவன். என்னை இப்படியே ஏற்று கொள்ளுங்கள்.
இந்துக்களை புண்படுத்த வேண்டும் என்பது எனது நோக்கமல்ல. என்னை இந்து மத விரோதி என்று தற்போதும் விமர்சிக்கின்றனர். நான் இந்து மத விரோதி இல்லை. எனக்கு பிராமணர்களும் ஏற்க வேண்டும். அல்லாதவர்களும் ஏற்க வேண்டும். எந்த மதமாக இருந்தாலும் வன்முறையில் ஈடுபடக்கூடாது என்பது தாழ்மையான வேண்டுகோள் என்றார்.