ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கமல்ஹாசன், ஆன்ட்ரியா, பூஜாகுமார் மற்றும் பலர் நடித்த 'விஸ்வரூபம்' படத்தின் முதல் பாகம் 2013ம் ஆண்டு பலத்த சர்ச்சைகளுக்குப் பிறகு வெளியானது. படத்தை வெளியிட மறுத்தால் இந்த நாட்டை விட்டே வெளியேறுவேன் என கமல்ஹாசன் கூறியது மிகவும் பரபரப்பானது. வெளிநாடுகளில் வெளியான பிறகு தமிழ்நாட்டில் படம் வெளியானது. அந்த சர்ச்சைகளால் படம் ஓடி வசூலையும் கொடுத்தது.
முதல் பாகம் தயாரான போதே படத்தின் இரண்டாம் பாகத்தையும் ஏறக்குறைய முடித்து வைத்திருந்தார் கமல்ஹாசன். தயாரிப்பாளருடன் ஏற்பட்ட பிரச்சனையால் கடந்த நான்கு வருடங்களாக படம் வெளிவராமல் இழுத்துக் கொண்டே போனது. சமீபத்தில் இரண்டாம் பாகத்திற்காக எடுக்க வேண்டிய சில காட்சிகளையும் எடுத்து முடித்தார் கமல்ஹாசன்.
நாளை கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் டிரைலர் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் டிரைலர் மிகவும் பிரமாதமாக வந்துள்ளதாக படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். பட வேலைகள் முடிவடையும் நிலையில் இருந்தாலும் படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து உறுதியானத் தகவல்கள் இல்லை. கமல்ஹாசன் தற்போது எடுத்து வரும் 'சபாஷ் நாயுடு' படமும் ஒரு வருடத்திற்கு மேலாக படப்பிடிப்பு நடத்தப்படாமல் இருக்கிறது.
விரைவில் அரசியலில் குதிக்க முடிவெடுத்துள்ள கமல்ஹாசன் அடுத்து ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 2' படத்திலும் நடிக்க உள்ளார்.