ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? |
நடிகை குஷ்பு பல வருடங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். அவரது வயிற்றில் கட்டி உருவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அது நிரந்தர தீர்வாக அமையவில்லை. இதனால் அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அகற்ற டாக்டர்கள் முடிவு செய்தனர்.
இதனால் தனியார் மருத்துவமனை ஒன்றில் நேற்று முன்தினம் குஷ்பு அனுமதிக்கப்பட்டார். நேற்று அவருக்கு ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்தது. அவரது வயிற்றில் இருந்த கட்டி நிரந்தரமாக அகற்றப்பட்டது. குஷ்புவின் கணவர் சுந்தர்.சி அருகில் இருந்து கவனித்துக் கொண்டார். சுந்தர்.சி.கூறியதாவது:
ஆபரேஷனுக்கு பிறகு குஷ்பு நலமாக இருக்கிறார். நாளை (இன்று) வீடு திரும்பி விடுவார். இரண்டு வாரங்கள் அவரை ஓய்வெடுக்கும்படி டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள். ஆபரேஷன் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி. இரண்டு வாரங்களுக்கு பிறகு மீண்டும் குஷ்பு தனது வழக்கமான பணிகளை தொடங்குவார். என்றார்.