சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது |
விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள மெர்சல் படம் பல்வேறு சர்ச்சைகளுக்கிடையே தமிழ் நாட்டில் வெற்றி பெற்றது. இந்தப் படத்தை தெலுங்கில் அதிரண்டி என்ற பெயரில் டப் செய்து வெளியிடுகிறார்கள்.
கடந்த வாரம் படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் அதற்கான சான்றிதழ் தராமல் இழுத்தடித்தனர். இதனால் ஒரு வாரத்துக்கு முன்பே வெளிவந்திருக்க வேண்டிய படம் வெளிவரவில்லை. படத்தில் ஜிஎஸ்டி வரிக்கு எதிரான வசனங்கள் இருப்பதால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தணிக்கை குழு சான்றிதழ் தராமல் இழுத்தடிப்பதாக கூறப்பட்டது. இதனை தணிக்கை குழு தலைவர் மறுத்தார்.
இந்த நிலையில் நேற்று தணிக்கை குழு மெர்சல் படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கி உள்ளது. இதனை தயாரிப்பாளர்களில் ஒருவரான ஹேமா ருக்மணி தனது டுவிட்டரில் உறுதிபடுத்தியிருப்பதோடு தணிக்கை சான்றிதழையும் வெளியிட்டுள்ளார். இதனால் தெலுங்கு மெர்சல் வருகிற 10ந் தேதி வெளிவரும் என்று தெரிகிறது.