பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
நடிகை சமந்தா கோடிகளில் சம்பளம் வாங்குகிறவர். சமீபத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டு அக்னிநேனி குடும்பத்துக்கு மருமகள் ஆனவர். ஆனால் இதையெல்லாம் தாண்டி அவருக்கு இன்னொரு முகம் இருப்பது பலருக்கும் தெரியாது.
சமந்தா, பிரதியுஷா என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி உதவியும், மருத்துவ உதவியும் செய்வது இதன் பணி. இதுவரை விளம்பரப்படுத்தாமல், வெளியில் தெரியாமல் பல உதவிகளை செய்திருக்கிறார். தனது திருமணத்தையொட்டி பெரிய அளவில் ஒரு உதவி செய்ய வேண்டும் என்று விரும்பினார் சமந்தா.
அதன் அடிப்படையில் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் உடனடியாக இருதய ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலையில் இருக்கும் 15 குழந்தைகளை தேர்வு செய்து அவர்களுக்கு உடனடியாக ஆபரேஷன் செய்து வைத்தார். அதற்கான செலவு தொகை முழுவதையும் சமந்தா செலுத்தி உள்ளார். சுமார் ஒரு கோடி வரையில் இருக்கும் என்கிறார்கள்.
இதுகுறித்து சமந்தா தனது டுவிட்டரில் "அழகான 15 குழந்தைகளும் இப்போது ஆரோக்கியத்துடன் நலமாக இருக்கிறார்கள். கடவுளுக்கு நன்றி" என்று குறிப்பிட்டிருக்கிறார்.