'பேமிலி' படங்களுக்கு மாறுகிறதா தமிழ் சினிமா? | 'முருகர்' பற்றிய படத்தில் நடிக்கப் போகிறாரா ஜுனியர் என்டிஆர்? | 3 பிஎச்கே : ஒரே மேடையில் வாழ்த்திய 'டிரென்டிங்' இளம் இயக்குனர்கள் | இரு மொழிப் படங்கள்: உஷார் ஆவார்களா தமிழ் நடிகர்கள் ? | டிஜிட்டல் தரத்தில் 'உம்ராவ் ஜான்' - நாளை ரீரிலீஸ் | கார்த்தி படத்தில் நானி? | சிரஞ்சீவி 157வது படத்தில் வெங்கடேஷ்? | தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் எச்.வினோத்! | மாநாடு 2ம் பாகம் உருவாகிறதா? | போலீஸ் அதிகாரியாக மணிகண்டன்! |
சேவற்கொடி என்ற பெயரில் உருவாகி வரும் புதிய படத்தில் திருச்செந்தூர் சூரசம்ஹார காட்சிகள் இடம்பெறுகின்றன. பனேரி பிக்சர்ஸ் சார்பில் தயாராகி வரும் புதிய படம் சேவற்கொடி. பிரபல நீச்சல் வீரர் அருண் பாலாஜி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் நாயகியாக பாமா நடிக்கிறார். இரா சுப்பிரமணியம் கதை, திரைக்கதை வசனம் எழுதி படத்தை இயக்குகிறார். இவர் டைரக்டர் ராதாமோகனிடம் உதவியாளராக பணிபுரிந்துள்ளார்.
சேவற்கொடி குறித்து சுப்பிரமணியம் அளித்துள்ள பேட்டியில், பிறரைப் பற்றி தவறாக புரிந்து கொள்ளும் தனிமனித கோபம்தான் அத்தனை பிரச்னைக்கும் காரணம் என்ற கருவுடன் படத்தை இயக்கி வருகிறேன். திருச்செந்தூரில் நடந்த உண்மை சம்பவம்தான் படத்தின் கதை. திருச்செந்தூரின் புகழ்பெற்ற சூரசம்ஹார காட்சிகளும் படத்தில் இடம்பெறுகின்றன. அந்த நிகழ்ச்சியில்தான் படத்தின் நாயகனும், நாயகியும், வில்லனும் ஒருவரை ஒருவர் சந்திக்கிறார்கள். அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லியிருக்கிறோம், என்று கூறியுள்ளார்.