ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
சேவற்கொடி என்ற பெயரில் உருவாகி வரும் புதிய படத்தில் திருச்செந்தூர் சூரசம்ஹார காட்சிகள் இடம்பெறுகின்றன. பனேரி பிக்சர்ஸ் சார்பில் தயாராகி வரும் புதிய படம் சேவற்கொடி. பிரபல நீச்சல் வீரர் அருண் பாலாஜி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் நாயகியாக பாமா நடிக்கிறார். இரா சுப்பிரமணியம் கதை, திரைக்கதை வசனம் எழுதி படத்தை இயக்குகிறார். இவர் டைரக்டர் ராதாமோகனிடம் உதவியாளராக பணிபுரிந்துள்ளார்.
சேவற்கொடி குறித்து சுப்பிரமணியம் அளித்துள்ள பேட்டியில், பிறரைப் பற்றி தவறாக புரிந்து கொள்ளும் தனிமனித கோபம்தான் அத்தனை பிரச்னைக்கும் காரணம் என்ற கருவுடன் படத்தை இயக்கி வருகிறேன். திருச்செந்தூரில் நடந்த உண்மை சம்பவம்தான் படத்தின் கதை. திருச்செந்தூரின் புகழ்பெற்ற சூரசம்ஹார காட்சிகளும் படத்தில் இடம்பெறுகின்றன. அந்த நிகழ்ச்சியில்தான் படத்தின் நாயகனும், நாயகியும், வில்லனும் ஒருவரை ஒருவர் சந்திக்கிறார்கள். அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லியிருக்கிறோம், என்று கூறியுள்ளார்.