நடிகர் விஷ்ணுவர்தனின் நினைவிடம் இடிப்பு : சுதீப், ரிஷப் ஷெட்டி வருத்தம் | 65 ஆயிரம் கேட்ட பஹத் பாசிலுக்கு ஒரு லட்சம் கொடுத்தேன் : தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் | 'கேம் சேஞ்ஜர், ஹரிஹர வீர மல்லு' தோல்விகள் தரும் பாடம் என்ன? | தமிழ் சினிமாவின் 2025 வறட்சியை மாற்றுமா 'கூலி' | கதை பேசப்படணும், அதனல நடித்தேன் : காயல் பட அனுபவம் குறித்து அனுமோல் | இதுவரை நடித்திராத கேரக்டரில் சுனில் : கண் பார்வையற்றவராக நடிக்கும் ஹீரோ | முதல் நாள் சாதனை வசூலை நோக்கி 'கூலி' | அயோத்தி, பார்க்கிங், மகாராஜா, லப்பர் பந்து இயக்குனர்களின் அடுத்த படம்? | 5 மொழிகளில் வெளியான ஆனந்தியின் வெப் சீரிஸ் | 'பிளாக் கோல்டில்' நிழல் உலக மாபியாக்களின் கதை |
சேவற்கொடி என்ற பெயரில் உருவாகி வரும் புதிய படத்தில் திருச்செந்தூர் சூரசம்ஹார காட்சிகள் இடம்பெறுகின்றன. பனேரி பிக்சர்ஸ் சார்பில் தயாராகி வரும் புதிய படம் சேவற்கொடி. பிரபல நீச்சல் வீரர் அருண் பாலாஜி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் நாயகியாக பாமா நடிக்கிறார். இரா சுப்பிரமணியம் கதை, திரைக்கதை வசனம் எழுதி படத்தை இயக்குகிறார். இவர் டைரக்டர் ராதாமோகனிடம் உதவியாளராக பணிபுரிந்துள்ளார்.
சேவற்கொடி குறித்து சுப்பிரமணியம் அளித்துள்ள பேட்டியில், பிறரைப் பற்றி தவறாக புரிந்து கொள்ளும் தனிமனித கோபம்தான் அத்தனை பிரச்னைக்கும் காரணம் என்ற கருவுடன் படத்தை இயக்கி வருகிறேன். திருச்செந்தூரில் நடந்த உண்மை சம்பவம்தான் படத்தின் கதை. திருச்செந்தூரின் புகழ்பெற்ற சூரசம்ஹார காட்சிகளும் படத்தில் இடம்பெறுகின்றன. அந்த நிகழ்ச்சியில்தான் படத்தின் நாயகனும், நாயகியும், வில்லனும் ஒருவரை ஒருவர் சந்திக்கிறார்கள். அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லியிருக்கிறோம், என்று கூறியுள்ளார்.