ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கால மாற்றத்திற்கேற்பவும், தொழில்நுட்ப மாற்றத்திற்கேற்பவும் பல புதிய விஷயங்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. அப்படி கடந்த பத்து வருடங்களாக இருந்து வரும் சமூக வலைத்தளங்கள் தற்போது திரைப்படத் துறையில் கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
படம் பார்க்கும் ஒவ்வொரு வரும் விமர்சகர்களாக மாறிவிட்டனர். ஒரு படத்தைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கையை விட அதைப் பற்றி விமர்சிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது என்று சொல்லுமளவிற்கு ஆகிவிட்டது.
அதன் தாக்கம் என்பது 2.0 பட இசை வெளியீட்டில் ரஜினிகாந்த் பேசியதன் மூலம் இன்னும் அதிகமாகியுள்ளது. 2.0 இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசிய போது சமூக வலைத்தள விமர்சனங்களைப் பற்றியும் குறிப்பிட்டுப் பேசினார். “படம் சுமாராக இருந்தால் மற்றவர்களின் மனம் நோகும்படி சமூகவலைத்தளங்களில் விமர்சனம் செய்ய வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்,” என்று அவர் பேசினார்.
ரஜினிகாந்த்தின் இந்த வேண்டுகோளை இன்றைய காலத்தில் யாராவது ஏற்பார்களா ?. ரஜினிகாந்தின் ரசிகர்கள் என்று சொல்லக் கூடியவர்கள் 40 வயதைக் கடந்தவர்களாக, சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்தாதவர்களாக இருப்பார்கள்.
அஜித், விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், சிம்பு ஆகியோரது ரசிகர்கள்தான் சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் ஏற்கெனவே, ரஜினியின் கபாலி போன்ற படங்களின் டீசர் பெரிய அளவில் யு டியூபில் ஹிட்டானதைத் தாங்கிக் கொள்ளாதவர்கள் தான்.
அடுத்து 2.0 படமும் பெரிய அளவில் சாதனை புரியும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அந்த நடிகர்களின் ரசிகர்கள் ரஜினிகாந்த் சொல்வதை ஏற்றுக் கொள்வார்களா?. நிச்சயம் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதை மனதில் வைத்துக் கொண்டு கூட ரஜினிகாந்த் இப்படி ஒரு வேண்டுகோளை வைத்திருக்கலாம்.