ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சிவகார்த்திகேயன், நயன்தாரா ஆகிய இருவரும் ஆஜ்மீர் தர்காவிற்கு சென்று வழிபட்டது, பனிப் பின்னணியில் நயன்தாராவின் வெள்ளை உடை புகைப்படம் ஆகியவை நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. ஆனால், அதற்குப் பின்னால் இருக்கும் வேறொரு செய்தியும் பரவிவருவது பலருக்கும் தெரியவில்லை.
ஆஜ்மீர் நகருக்கு அருகில் உள்ள உலகப் புகழ் பெற்ற கிஷன்கார் மார்பிள் சிட்டி பகுதியில்தான் நயன்தாரா, சிவகார்த்திகேயன் பங்கேற்ற 'சிவகார்த்திகேயன்' படத்தின் பாடல் காட்சி கடந்த சில நாட்களாக படமாகியிருக்கிறது. இந்த பாடல் காட்சிக்கு நயன்தாராவைப் பாதுகாக்க பவுன்சர்கள் என்றழைக்கப்படும் பாதுகாவலர்கள் பலர் பயன்படுத்தப்பட்டார்களாம். அது மட்டுமல்ல உள்ளூர் செக்யூரிட்டி ஆட்கள் பலரையும் பாதுகாப்பிற்கு அழைத்திருக்கிறார்கள். மொத்தமாக 200 பேர் வரை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்களாம்.
ரஜினிகாந்த நடிக்கும் படம் என்றால் கூட இவ்வளவு பாதுகாப்பு இருக்காது என்று படக்குழுவிலேயே கமெண்ட் அடித்துள்ளார்களாம். ஏற்கெனவே, இப்படத்திற்காக நயன்தாராவுக்கென தனியாக ஐந்தாறு பாதுகாவலர்கள் நியமிக்கப்ட்டிருந்தார்கள். அதைப் பார்த்து சிவகார்த்திகேயன் ஜோடியாக பொன்ராம் இயக்கும் படத்திலும் சமந்தாவும் தனக்கென பாதுகாவலர்கள் வேண்டும் என பந்தாவாக வந்திருக்கிறார். பாதுகாவலர்களுக்கு செலவு செய்வதிலேயே தனி படம் எடுத்துவிடலாம் என்கிறார்கள் கோலிவுட்டில்.