ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரஜினியின் காலா படத்திற்கு தடை கோரிய வழக்கை, சென்னை உரிமையியல் கோர்ட் தள்ளுபடி செய்தது. கபாலி படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினி - ரஞ்சித் கூட்டணியில் உருவாகி வரும் கேங்ஸ்டர் படம் காலா. மும்பையில் வாழ்ந்த தமிழர் ஒருவரின் வாழ்க்கையை தழுவி இப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.
இந்நிலையில் ராஜசேகரன் என்பவர், காலா படத்தின் மூலக்கரு மற்றும் தலைப்பு என்னுடையது, ஆகவே இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்டார் நீதிபதி.
தொடர்ந்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காப்புரிமை சட்டத்தின் கீழ் தான் இந்த வழக்கை விசாரிக்க முடியும் என காலா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், மனுதாரர் ராஜசேகரனை, சென்னை ஐகோர்ட்டில் முறையிட அறிவுறுத்தியதுடன் இந்த வழக்கையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.