ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகை குஷ்பு நேற்று தனது டுவிட்டரில் தனக்கு விரைவில் ஒரு ஆபரேஷன் நடக்கிறது. அதன்பிறகு நான் இரண்டு வாரங்கள் ஓய்வில் இருப்பேன் என்று குறிப்பிட்டிருந்தார். இதனால் பலரும் அவரை தொடர்பு கொண்டு விசாரித்தனர். இதுகுறித்து அவர் கூறியதாவது:
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு வயிற்றில் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மருத்து மாத்திரைகளில் அதனை கரைத்து விடலாம் என்று டாக்டர்கள் கூறியதையடுத்து அதற்கான மருந்து சாப்பிட்டு வந்தேன். ஆனாலும் வலி அதிகமாக இருந்தது. இதனால் ஆபரேஷன் செய்து கட்டியை அகற்றிவிடலாம் என்று டாக்டர்கள் கூறிவிட்டனர்.
இதனால் அப்பல்லோ மருத்துவமனையில் வருகிற நவம்பர் 4ந் தேதி ஆபரேஷன் நடக்கிறது. அதன்பிறகு இரண்டு வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆபரேஷன் மற்றும் ஓய்வு காலத்தில் யாருடனும் தொடர்பு கொள்ள முடியாது என்பதால் இந்த தகவலை முன்னதாக டுவிட்டரில் வெளியிட்டேன். உடனே தொடர்பு கொண்டு நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி. என்கிறார் குஷ்பு.