ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சிவாஜி படத்தை அடுத்து ரஜினியை வைத்து எந்திரன் படத்தை இயக்கினார் ஷங்கர். அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது இதன் தொடர்ச்சியாக 2.O உருவாகி உள்ளது. முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் ரூ.400 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாய் தயாராகி உள்ளது. ரஜினியுடன் பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமாரும் இணைந்துள்ளார். எமி ஹீரோயினாக நடித்திருக்கிறார்.
இந்த படத்தை உலகமெங்கிலும் வெளியிட்டு வெற்றிப்படமாக்கி விட வேண்டும் என்பதற்காக, பெரிய அளவில் பப்ளிசிட்டிகளை முடுக்கி விட்டுள்ளனர். அதோடு கடந்த சில தினங்களுக்கு முன்பு 2.ஓ படத்தின் இசை விழாவை துபாயில் நடத்தினர்.
அப்போது இயக்குனர் ஷங்கர் 2.ஓ படத்தின் கதை பற்றி பேசும்போது, எந்திரன் படத்தில் ஒரு மிஷினுக்கு பெண் மீது காதல் ஏற்பட்ட கதையை படமாக்கியிருந்தேன். ஆனால் இந்த 2.ஓ படத்தில் ஒரு மிஷினுக்கு இன்னொரு மிஷின் மீது காதல் ஏற்படுவது போல் கதை பண்ணியிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் ஷங்கர்.