ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நயன்தாரா-பிரபுதேவா பிரச்னையில் என்னை ஏன்..? தேவையில்லாமல் இழுக்குறாங்கன்னு எனக்கு தெரியல, இதுபோன்ற விஷயங்களை கேட்கும் போது ரொம்ப அசிங்கமா, அருவெறுப்பா இருக்கு என்று கொதித்துள்ளார் ஹன்சிகா மோத்வானி.
பிரபுதேவாவின் எங்கேயும் காதல் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. தொடர்ந்து தனுஷ், விஜய் என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடிபோட்டு தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக வலம் வரத்தொடங்கியுள்ளார். தற்போது தெலுங்கு படத்தில் பிஸியாக இருக்கும் ஹன்சிகாவை ஒரு செய்தி அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பிரபுதேவா-நயன்தாரா பிரிவுக்கு காரணம் ஹன்சிகா தான் என்று ஒரு பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்தது.
இதுபற்றி ஹன்சிகாவிடம் கேட்டபோது, நீண்ட நேரத்திற்கு பின் சூடாக பேசத் தொடங்கினார். என்னைப் பற்றி உங்களுக்கு தெரியும், நான் ரொம்ப ஸ்டைரட் பார்வர்ட். எதையும் தைரியமாக பேசிடுவேன். ஆனா, என்ன பத்தி பிரபுதேவா கூட பேசுறது ரொம்ப தப்பா படுது. அவர் எங்க வீட்டு பெரிய அண்ணன் மாதிரி. அவரை அண்ணா என்று தான் எப்போதும், எங்கிருந்தாலும் கூப்பிடுவேன். ஆனால் இப்போ இந்த மாதிரி செய்தியை கேட்கும் போது ரொம்பவே அசிங்கமா இருக்கு. எங்கேயும் காதல் படத்தின் சூட்டிங் பாரிஸ் நடந்த போது பிரபுதேவா கூட நயன்தாராவும் வந்திருந்தாங்க. அப்போது தான் அவரை பார்த்து சந்தித்து கொஞ்ச நேரம் பேசினேன். அதன் பிறகு பிரபுதேவா, நயன்தாரா யார்கிட்டேயும் நான் பேசல, அவங்கள பார்க்கல. அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகிவிட்டதால, சூட்டிங்கில் பிஸியாகிவிட்டேன்.
நயன்தாரா-பிரபுதேவா இவர்களுக்குள் நடக்கிற கேட் வால் பிரச்னையில் என்னை ஏன் இழுக்குறாங்க...? என்று தெரியல. இப்படி செய்தியை கேட்கும்போதெல்லாம் ரொம்ப அசிங்கமா, கேவலமா, அருவெறுப்பா இருக்கு. என் இமேஜை கெடுக்க பாக்குறாங்க. இந்தமாதிரி வதந்தியை பரப்புறவுங்க வீட்டிலேயும் பெண்கள் இருப்பாங்க. கண்ணா பின்னான்னு எழுதி, யாருக்கோ நல்லது பண்றோம் என்கிற பேர்வழியில், எங்க வீட்டில் உள்ள ஒட்டு மொத்த நிம்மதியையும் கெடுத்துட்டாங்க. இதைப்பற்றி என் அம்மா, என் அண்ணன் என எல்லோரும் ரொம்ப பீல் பண்ணுனாங்க.
நான் லண்டனுல படிச்சவ என்றாலும், நம்ம நாட்டு கலாச்சாரத்தை நிறையவே பின்பற்றுபவள். எனக்குனு ஒரு லிமிட் இருக்கு. என் வேலை எனக்கு முக்கியம். நான் இன்னும் சினிமாவுல நிறைய சாதிக்க வேண்டியிருக்கு. இப்போ மும்பையில இருக்கேன். ஒரு கல் ஒரு கண்ணாடி படம் முடிஞ்சு, சிம்புவோட வேட்டை மன்னன் படத்தில் நடிக்கிறேன். இதுபோன்ற செய்திகள் என்னை மட்டும் அல்லாமல் என்னோட வேலையையும் பாதிக்குது.
சரி இதுபற்றி பிரபுதேவாவுடன் பேசினீங்களா என்று கேட்டதும், இதுவரைக்கும் இல்ல, பொறுமையா இருக்கேன். இது எல்லாதுக்கும் கடவுளும், காலமும் பதில் சொல்லும். என்ன பத்தி அவதூறான செய்திக்கும், விமர்சனங்களுக்கு எல்லாம் நான் பதில் சொல்லிகிட்டு இருக்க முடியாது என்று கொதித்து போய் பேசி முடித்தார் ஹன்சிகா.