ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பிரபல தெலுங்கு நடிகை பிரதியுஷா. தமிழில் மனுநீதி, சூப்பர் குடும்பம், தவசி, சவுண்ட் பார்ட்டி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். ஐதராபத்தில் வசித்து வந்த பிரதியுஷா கடந்த 2002ம் ஆண்டு காதலன் உடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதில் காதலன் உயிர் பிழைத்து விட்டார். இது தொடர்பான வழக்கு இப்போதும் நடந்து வருகிறது. இந்த நிலையில் பிரதியுஷா தற்கொலை செய்யவில்லை. அவளை கொலை செய்து விட்டார்கள். அதனை மூடி மறைக்கும் வேலைகள் நடந்து வருகிறது என்று பிரதியுஷாவின் தாயார் சரோஜினி கூறுகிறார். இது தொடர்பாக ஐதராபத்தில் அவர் அளித்த பேட்டி வருமாறு:
என் மகள் விஷம் குடித்து சாகவில்லை. அவரை பலர் பலாத்காரம் செய்து கொன்று விட்டு, அவள் வாயில் விஷம் ஊற்றி கொலை செய்திருக்கிறார்கள். அவள் உடல் முழுவதும் பலரின் நகக்கீரல்கள் இருந்தது. அவளது பாய்பிரண்ட் என்று கூறப்படுகிறவர் உதட்டில் விஷத்தை தடவி நாடகம் ஆடினார். இந்த வழக்கு என் மகள் தற்கொலை செய்து கொண்டதாகத்தான் முடியும். குற்றவாளிகள் விடுதலை அடைவார்கள். ஆனால் ஆண்டவன் அவர்களை நிச்சயம் தண்டிப்பான்.
இந்த சம்பவத்தால் என் மகன் மனம் பாதிப்படைந்துள்ளான். கடந்த 15 வருடங்களாக நான் மட்டுமே நீதிக்காக போராடி வருகிறேன். எனக்கு துணையாக யாரும் வரவில்லை. போலீசார் என் மகளுக்கு ஆதராவாக ஒரு ஆதாரத்தையும் சேகரிக்கவில்லை. நாங்கள் தனித்து விடப்பட்டிருக்கிறோம்.
இவ்வாறு சரோஜினி கூறியுள்ளார்.