ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
உனக்குள் நான், லைட்மேன், பியூட்டிபுல் ஐ போன்ற படங்களை இயக்கிய வெங்கடேஷ் குமார் இயக்கியுள்ள புதிய படம் நீலம். புளூவேவ் எண்டர்டெயின்மெண்ட் மூலம் அவரே தயாரித்தும் உள்ளார். ஸ்ரீ, பவித்ரா, ஜெகன், விஜய்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். சதீஷ் சக்ரவர்த்தி இசை அமைத்துள்ளார். ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படம் இலங்கையில் நடந்த உள்நாட்டு போரை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்தின் டிரைலரை தணிக்கை அதிகாரிகள் பார்த்தனர். பின்பு டிரைலரில் இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துக்கள் உள்ளது. வன்முறை அதிகமாக உள்ளது. என்று கூறி தணிக்கை சான்றிதழ் தர மறுத்து விட்டனர். இதுகுறித்து இயக்குனரும், தயரிப்பாளருமான வெங்கடேஷ்குமார் கூறியதாவது:
நீலம் திரைப்படத்தின் முன்னோட்டம் தணிக்கை குழுவால் மறுக்கப்பட்டது. இத்திரைப்படம் ஈழ தமிழர்களை பற்றி உள்ளதால் மற்றும் போராளிகளின் வாழக்கையை தழுவி எடுக்க பட்டதால் இத்திரைப்படத்திற்கு தணிக்கை குழு சான்றிதழ் தர மறுத்து விட்டனர். இத்திரைப்படம் எனது 5 வருட உழைப்பு, இந்த முடிவு என்னை மிகவும் பாதித்துள்ளது. இது தமிழருக்காக எடுக்க பட்ட படம். எனக்கு நீதி தேவை . என்கிறார் வெங்கடேஷ்.