ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாகுபலி-2 படத்தில் நடித்த பிறகு பல மாதங்களாக ஓய்வெடுத்து வந்த பிரபாஸ், தற்போது சுஜீத் இயக்கும் சாஹோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக தனது பாடிலாங்குவேஜை பக்காவாக மாற்றி ஸ்டைலிசான கெட்டப்பில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படமும் பாகுபலி படத்தைப்போன்றே தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் உருவாகி வருகிறது.
மேலும், இந்த படத்தில் நடித்த பிறகு பாலிவுட் பட இயக்குனர் கரண் ஜோகர் இயக்கும் படத்தில் பிரபாஸ் நடிக்கயிருந்ததாகவும், அந்த படத்தில் நடிக்க பிரபாஸ் ரூ. 20 கோடி சம்பளம் கேட்டதால் அந்த முயற்சி கைவிடப்பட்டதாகவும் பாலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் இந்த செய்தியை பிரபாஸ் தரப்பு மறுத்துள்ளது. நேரடி இந்தி படத்தில் நடிப்பது சம்பந்தமாக இதுவரை எந்த டைரக்டரிடம் கதை கேட்கவில்லை. இப்போதைக்கு பிரபாஸின் முழுக்கவனமும் சாஹோ படத்தில்தான் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.