சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய விஜய்யின் மெர்சல் படம், தெலுங்கில் அதிரிந்தி என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. இதற்காக தணிக்கை சான்று பெற தயாரிப்பாளர் விண்ணப்பித்தார். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் அதற்குரிய சான்றிதழை கொடுக்காமல் காலதாமதம் செய்து வருகிறார்கள். இதனால் 27ந் தேதி வெளியாக வேண்டிய படம் திட்டமிட்டபடி வெளிவரவில்லை.
படத்தில் ஜி.எஸ்.டி வரி குறித்த கவிமர்சனங்கள் இருப்பதால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் தணிக்கை குழு சான்றிதழ் தராமல் வேண்டுமென்றே இழுத்தடிப்பதாக கூறப்படுகிறது. இதற்கு மத்திய தணிக்கை குழு தலைவர் பிரஷன் ஜோஷி அளித்துள்ள விளக்கம் வருமாறு:
அதிரிந்தி படத்துக்கு சான்றிதழ் வழங்குதவற்கு தணிக்கை குழு வேண்டுமேன்றே தாமதம் செய்யவில்லை. ஒரு படத்துக்கு தணிக்கை சான்று வழங்க எவ்வளவு நாள் ஆகும் என்பதை அதன் இணையதளத்திலேயே வெளியிட்டுள்ளோம். விண்ணப்பித்த நாளில் இருந்து 68 நாள் வரை ஆகும். சில படங்கள் விரைவாக முடிந்து உடனடியாக சான்றிதழ் கொடுக்கப்பட்டு விடும். சில படங்களுக்கு தாமதமாகும். இது நடைமுறையில் உள்ள ஒன்று. அதிரிந்தி படத்தை பொறுத்தவரை எல்லாம் விதிமுறைகளின் படியே நடக்கிறது.
தமிழ் படத்துக்கு எந்த விதிமுறைப்படி சான்று அளிக்கப்பட்டதோ, அதே அடிப்படையில்தான் தெலுங்கு சான்று அளிக்கப்படும். எந்த காட்சியையும் நீக்கச் சொல்லவில்லை. விளம்பரத்துக்காக தணிக்கை குழு மீது குற்றம் சொல்வதை தவிர்த்துவிடுங்கள்.
இவ்வாறு ஜோஷி கூறியுள்ளார்.