மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? |
மெர்சல் படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளார். துப்பாக்கி, கத்தி படங்களை விட வேற லெவலில் இந்தப்படம் இருக்கும் என முருகதாஸே கூறியுள்ளார். அனேகமாக இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைக்கலாம் என சொல்லப்பட்டு வரும் நிலையில் இந்தப்படத்திற்கு மலையாள ஒளிப்பதிவாளரான கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. இவருக்கு தமிழில் இதுதான் முதல் படம்.. அதுவும் ஹிட் காம்பினேஷனில் அமைந்துள்ளது இவருக்கு நிச்சயமாக ஜாக்பாட் தான்.
கடந்த 2013ல் துல்கர் நடித்த 'நீலாகாசம் பச்சக்கடல் சுவண்ண பூமி' என்கிற படம் மூலம் ஒளிப்பதிவராக அறிமுகமான இவர், அடுத்ததாக துல்கரின் கலி, சோலோ (ருத்ரா மற்றும் திரிலோக்கின் குறும்படங்கள்) மற்றும் வித்தியாசாமான பாணியில் உருவாக்கி ரசிகார்களை கவர்ந்த அங்கமாலி டைரீஸ் ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது மலையாளத்தில் முதன்முதலாக நுழைந்துள்ள த்ரிஷா, நிவின்பாலியுடன் இணைந்து நடித்துவரும் ஹே ஜூட்' படத்திற்கும் இவர்தான் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.